Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

Mango tree easy drawing for kids

மழலை கைவண்ணம்

ஹாய் குழந்தைகளே நம்முடைய மழலை கைவண்ணம் பகுதிகள் நிறைய வரைபடங்கள் வரைவது எப்படி என்று கற்றுக் கொண்டீர்கள். இன்று மாஞ்செடி என்று அழைக்கப்படும் மாமரத்தின் இளமை தோற்றத்தை வரைவோம். நீங்கள் அனைவரும் ஒரு செடியை நட்டு வளர்க்க வேண்டும் இயற்கையை காக்க வேண்டும். உங்கள் சந்தேகம் சரியே ஒரு செடியால் இயற்கையை காக்க முடியாது நீங்கள் ஒவ்வொருவரும் உருவாக்கும் செடியால் இயற்கை செழித்து வளரும். என்று நம் வகுப்பில் மாஞ்செடி எப்படி எளிதாக வரைவது என்பதை பார்ப்போம்.


படி 1:
  • மாஞ்செடியின் அடிப்பகுதி மற்றும் கிளைகளை கீழே உள்ளவாறு வரையுங்கள்.
  • கிளைகளில் சில இலைகளை மெல்லிய கோடு மூலம் வரையவும்.


படி 2:
  • கிளையின் கொம்பில் கீழே உள்ளவாறு மேலும் சில இலைகளை வரையுங்கள்.


படி 3:
  • மாஞ்செடி கிளையின் கொம்பில் மேலும் சில இலைகளை வரைந்து அடர்த்தியாக தெரியுமாறு வரையவும்.


படி 4:
  • மாஞ்செடியின் மற்றொரு கிளையில் அடர்த்தியாக இலைகளை வரையுங்கள்.


படி 5:
  • இலையின் நரம்பு பகுதிகளை கீழே உள்ளவாறு வரையவும்.

 

 படி 6:
  • மாஞ்செடியின் அனைத்து இலைகளிலும் நரம்புகளை வரையுங்கள்.


படி 7:
  • மாஞ்செடி இலையின் மைய நரம்பின் மீது வண்ணம் தீட்டவும்.


படி 8:
  • இலையின் மேற்பரப்பை பென்சிலால் வண்ணம் தீட்டுங்கள்.


படி 9:
  • மாஞ்செடி இலையின் பரப்பிற்குள் வண்ணம் தீட்டி அதன் எல்லை கோடுகளை அச்சா‌க வரையுங்கள்.


படி 10:
  • மாஞ்செடி இலையின் மீது சில இடங்களில் அச்சா‌க வண்ணம் தீட்டவும்.

 

 படி 11:
  • மாஞ்செடியின் அடிப்பகுதி மற்றும் கிளைகளை அச்சாக வண்ணம் தீட்டுங்கள். இந்த பகுதி மிகவும் கருமையாக இருக்கும்.


படி 12:
  • மாஞ்செடி பார்க்க இயற்கையாக தெரிவதற்காக அதன் கீழ் அதன் நிழல் பரப்பை வரைய வேண்டும். 
  • இந்த நிழல் பகுதி மரத்தின் அடியில் வரையப்படும்.


படி 13:
  • மாஞ்செடியின் கீழே சிறிய கோடுகள் மூலம் புற்கள் அமைப்பை வரையவும். இப்போது மாஞ்செடியை முழுமையாக வரைந்துவிட்டீர்கள்.

குழந்தைகளே மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற வாசகத்தை படித்திருப்பீர்கள். வளர்ச்சிக்காக இயற்கையின் வளங்களை மனிதன் அழிப்பதால் புவி வெப்பமடைதல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதை தடுக்க நீங்கள் இன்றே ஒரு செடியை நட்டு வளர்க்க வேண்டுகிறோம்.

எங்கள் பக்கத்தை ட்விட்டரில் பின்தொடர இந்த லிங்கை கிளிக் செய்யவும். தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக...



மேலும் வரைய கற்றுக்கொள்ள,

Learn By this affiliate link god bless you:


 

Comments

Popular posts from this blog

Bharathiyar drawing for kids

Tamil kavithai collection for all relationship

News paper, hope, god Tamil kavithai