Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

Orange step by step drawing for kids

ஹாய் குழந்தைகளே, இன்று நம் வகுப்பில் வரையப்போகும் பழம் ஆரஞ்சு. சென்ற வகுப்பில் மாம்பழம் வரைவது எப்படி என கற்றுக்கொண்டீர்கள். இன்று ஆரஞ்சு பழம் வரையலாம் வாருங்கள்.




படி 1:
உங்களின் பென்சில் மற்றும் வெள்ளை காகிதத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஆரஞ்சு பழம் வடிவத்தை பார்த்துள்ளீர்கள் அல்லவா? ஆம் அது ஒரு கோளக வடிவத்தில் இருக்கும். 
  • முதலில் மெல்லியதாக ஒரு வட்டம் வரையுங்கள். 
  • மேற்பகுதியை அழித்துவிட்டு சிறிய வளைவினால் இணையுங்கள். இப்போது ஆரஞ்சு பழத்தின் வடிவத்தை வரைந்துவிட்டீர்கள்.



படி 2:
இப்போது ஆரஞ்சு பழத்தை தாங்க உதவும் காம்பு பகுதி மற்றும் பழத்தின் மீது உள்ள வளைவான பகுதிகளை வரையப்போகிறோம்.

  • சிறிய வட்டம் வரைந்து அதனை சுற்றி கீழே உள்ள படத்தை போல சில கோடுகள் வரையுங்கள்.



படி 3:
  • காம்பு பகுதியில் இருந்து இலைக் காம்புகளை நீட்டி விடுங்கள். 
  • ஒரு பகுதியில் சிறிய இலை வரையுங்கள். 
  • மற்றுமொரு பகுதியில் பெரிய இலை வரையுங்கள்.

இலை வரையும் முறை:
  • முதலில் இலைக்காம்பிலிருந்து மைய நரம்பை வரையுங்கள். 
  • நரம்பு பகுதியின் மேற்புறத்தை சற்று அகலமாக வரையுங்கள். 
  • நரம்பு பகுதியின் கீழ்பகுதியை சற்று அகலம் குறைவாக வரையுங்கள். 


 

 படி 4:
பெரிய இலையின் நரம்பு பகுதியை இப்போது வரையப்போகிறோம். 
  • மைய நரம்பிலிருந்து இலையின் பரப்பு எல்லை வரை கோடுகள் வரையுங்கள். 
  • நரம்பின் மேல் மற்றும் கீழ்பகுதியை வரைந்து முடியுங்கள்.



படி 5:
  • பெரிய இலையின் நரம்பு பகுதியை வரைந்தது போல சிறிய இலையின் நரம்பு பகுதியை வரைந்து முடியுங்கள்.



படி 6:
ஆரஞ்சு பழத்தின் மேற்பரப்பில் சிறு சிறு குழிகள் இருக்கும் அதனை இப்போது வரையலாம். 
  • ஆரஞ்சு பழத்தின் எல்லைக்குள் சிறிய வட்டங்களை கீழே உள்ளவாறு வரையுங்கள்.



படி 7:
  • இலை இயற்கையான தோற்றம் பெற அதன் மீது மெல்லியதாக வண்ணம் தீட்டுங்கள். 
  • இலையின் பரப்பு எல்லைக்குள் மட்டும் வண்ணம் தீட்ட வேண்டும்.


 

 படி 8:
  • இப்போது ஆரஞ்சு பழத்தின் எல்லைக்குள் முழுவதும் வண்ணம் தீட்டுங்கள். 
  • ஆரஞ்சு பழத்தை மிகவும்  அருமையாக வரைந்துவிட்டீர்கள். 



படி 9:
  • வரைபடத்தின் கீழே அதன் நிழல் படுவதுபோன்று வரையுங்கள். 
குழந்தைகளே இப்போது நீங்கள் ஆரஞ்சு பழத்தை முழுமையாக வரைந்துவிட்டீர்கள். இதே போன்று வீட்டில் வரைய முயற்சி செய்யுங்கள்.



குழந்தைகளே இன்றைய வகுப்பு முடிந்தது இதில் ஆரஞ்சு பழத்தை மிகவும் அருமையாக வரைந்துவிட்டீர்கள். மீண்டும் அடுத்த வகுப்பில் மற்றுமொரு வரைபடத்தை வரைய கற்றுக்கொள்வோம் இப்படிக்கு உங்கள் மழலை கைவண்ணம்.

தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் வருக. எங்களை ட்விட்டரில் பின்தொடர இந்த லிங்கை கிளிக் செய்யவும்.


மேலும் சில வரைபடம் பார்க்க ,
  1. ஆப்பிள் வரைபடம் பார்க்க 
  2. மாம்பழம் வரைய கற்றுக்கொள்ள 
  3. வாழைப்பழம் வரைய கற்றுக்கொள்ள 
  4. லீச் பழம் வரைய கற்றுக்கொள்ள 

Learn By this affiliate link god bless you:



Comments

Popular posts from this blog

Bharathiyar drawing for kids

Tamil kavithai collection for all relationship

News paper, hope, god Tamil kavithai