Posts

Showing posts from January, 2024

Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

News paper, hope, god Tamil kavithai

தமிழ் கவிதைகள்  இந்த கவிதையில் நட்பு, காதல், விரும்பிய ஒருவரின் பிரிவு ஆகிய தலைப்புகளில் கவிதைகள் எழுதியுள்ளேன். படித்து தங்களுக்கு நெருங்கிய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். செய்தித்தாள் வீட்டு விஷயங்கள் கூட அறிந்து கொள்ள அனுமதிக்கப்படாத எனக்கு... உலக விஷயங்களை பரிச்சயம் ஆக்கினாய்... இருண்டு கிடந்த அறிவின் அறைகளில் அறிவென்னும் ஒளி ஏற்றினாய்... காண்பவர் கண்களுக்குக் காகிதமாய்த் தெரிந்தாலும்... உன்னைக் களைபவர் கண்களுக்குக் கோபுரம் ஆகிறாய்... அறிவிலியும் ஞானியானான் உன்னால்... விளக்கின் ஒளியில் பயிலும் மாணவர்களுக்கு... என்றும் நீ அணையா விளக்கே...! Poet - riyashok  நம்பிக்கை  கோபுரங்கள் சாய்ந்தாலும் சாய்வதில்லை... வானம் வீழ்ந்த போதும் வீழ்வதில்லை... கடல் நீர் வற்றினாலும் வற்றுவதில்லை... நெருப்பாலும் அழிவதில்லை... நீராலும் அணைவதில்லை... தோற்றாலும் துவண்டு விடுவதில்லை... நம்பிக்கை...! Poet - riyashok  கடவுள்  கோவில்களும்... கோபுரங்களும்... அலங்காரங்களும்... ஆடைகளும்... ஆபரணங்களும்... நம்பிக்கைகளும்... மூடநம்பிக்கைகளும்... வேண்டுதல்களும்... காணிக்கைகளும்... படைத்தவன...

Friendship, love, Missing Tamil kavithai

 தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இந்த கவிதையில் நட்பு, காதல், விரும்பிய ஒருவரின் பிரிவு ஆகிய தலைப்புகளில் கவிதைகள் எழுதியுள்ளேன். படித்து தங்களுக்கு நெருங்கிய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நட்பு  கல்லூரியில் கால் வைத்த முதல் அடியில் மனதில் கொண்ட பயம்... புது உலகம்... புதிய வாழ்க்கை... புதிய மனிதர்கள்... ஆனால் அந்த ஆண்டுகள் தந்த மாற்றங்கள்... களிமண் போல் இருந்த என்னை சிற்பமாய் வடித்தது... வடிநீராய் இருந்த என்னை குடிநீராக மாற்றியது... புதைந்து கிடந்த என் திறமைகளைத் தோண்டி எடுத்து விட்டது... வாழ்க்கையின் பாதையைக் காட்டியது... புத்தம் புது நண்பர்கள்... மனம் நிறைய மகிழ்ச்சி... சின்னச் சின்ன சண்டைகள்... பரிமாறிக் கொண்ட உண(ர்)வுகள்... நகைச்சுவை நேரங்கள்... கிண்டல்கள்... கேலிகள்... சேட்டைகள்... அரட்டைகள்... நண்பர்கள் போன்ற ஆசிரியர்கள்... துன்பம் தர ஆயிரம் இடங்களும் உறவுகளும் வந்த போதும்... இன்பம் தரும் சோலையாய்த் திகழ்ந்தது... கல்லூரிக் காலமே...!      Poet - riyashok நட்பு பிறந்த...

Digital Van drawing steps

Image
  V-Van படி 1: மகிழுந்து வரைவதற்கு முதலில் பென்சிலால் எளிமையாக ஒரு செவ்வக வடிவ கட்டம் வரைய வேண்டும். செவ்வகத்தின் அடிப்பகுதியில் உள்ள கோட்டை அழித்து சக்கரம் வரைய இரண்டு அரைவட்ட வில் வரைய வேண்டும். படி 2: அடுத்ததாக சக்கரம் வரைய இரண்டு வட்டங்களை வரைய வேண்டும். படி 3: மகிழுந்து கதவுகளை வரைய படத்தில் உள்ளதுபோல் இரண்டு கட்டங்களை வரைய வேண்டும். படி 4: அடுத்ததாக மகிழுந்து கண்ணாடிகளை படத்தில் உள்ளதுபோல் வரைய வேண்டும். படி 5: மகிழுந்து வரைபடம் நிறைவுபெற்றது. தற்போது உங்களுக்கு பிடித்தமான வண்ணத்தை தேர்வு செய்து மகிழுந்து மீது தீட்ட வேண்டும். படி 6: மகிழுந்து சக்கரத்திற்கு கருப்பு நிற வண்ணம் தீட்ட வேண்டும்.