Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

News paper, hope, god Tamil kavithai

தமிழ் கவிதைகள் 

இந்த கவிதையில் நட்பு, காதல், விரும்பிய ஒருவரின் பிரிவு ஆகிய தலைப்புகளில் கவிதைகள் எழுதியுள்ளேன். படித்து தங்களுக்கு நெருங்கிய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

செய்தித்தாள்

வீட்டு விஷயங்கள் கூட அறிந்து கொள்ள அனுமதிக்கப்படாத எனக்கு...

உலக விஷயங்களை பரிச்சயம் ஆக்கினாய்...

இருண்டு கிடந்த அறிவின் அறைகளில் அறிவென்னும் ஒளி ஏற்றினாய்...

காண்பவர் கண்களுக்குக் காகிதமாய்த் தெரிந்தாலும்...

உன்னைக் களைபவர் கண்களுக்குக் கோபுரம் ஆகிறாய்...

அறிவிலியும் ஞானியானான் உன்னால்...

விளக்கின் ஒளியில் பயிலும் மாணவர்களுக்கு...

என்றும் நீ அணையா விளக்கே...!

Poet - riyashok 

நம்பிக்கை 

கோபுரங்கள் சாய்ந்தாலும் சாய்வதில்லை...

வானம் வீழ்ந்த போதும் வீழ்வதில்லை...

கடல் நீர் வற்றினாலும் வற்றுவதில்லை...

நெருப்பாலும் அழிவதில்லை...

நீராலும் அணைவதில்லை...

தோற்றாலும் துவண்டு விடுவதில்லை...

நம்பிக்கை...!

Poet - riyashok 

கடவுள் 

கோவில்களும்...

கோபுரங்களும்...

அலங்காரங்களும்...

ஆடைகளும்...

ஆபரணங்களும்...

நம்பிக்கைகளும்...

மூடநம்பிக்கைகளும்...

வேண்டுதல்களும்...

காணிக்கைகளும்...

படைத்தவன் என்ற பட்டமும்...

ஆள்பவன் என்ற கிரீடமும்...

அழிப்பவன் என்ற பயமும்...

காப்பவன் என்ற பக்தியும்...

இத்துணை புகழ் கொண்டு...

இருக்கிறதா இல்லையா என்ற குழப்பமும் கொண்டு...

நம் மனதில் நாமாய் குடிகொண்டுள்ள மனிதத் தன்மையே...

கடவுள்...!

Poet - riyashok 



Comments

Popular posts from this blog

Bharathiyar drawing for kids

Tamil kavithai collection for all relationship