தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள். அம்மா அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok அப்...
National kite flying day poem
- Get link
- X
- Other Apps
தமிழ் கவிதைகள்
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இன்று தேசிய பட்டம் பறக்கவிடும் நாள் பட்டம் குறித்த எளிமையான ஒரு கவிதையை பதிவிடுகிறேன் பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ளலாம் நன்றி.
தேசிய பட்டம் பறக்கவிடும் நாள் ( February 8- National kite flying day Special poem):
அறியாத வயதில்...
உன் வாலைப் பிடித்தேன்...
உயரம் தொட எண்ணிய உன்னைத் தடுத்தேன்...
விட்டுவிட்டால் தொலைந்து விடுவாய் என்று எண்ணினேன்...
இரண்டே குச்சிகளில்...
மொத்த நம்பிக்கையும் வைத்தாய்...
உனக்கும்...
எனக்கும்...
பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை...
உன்னைப் போலத் தான் நானும்...
மற்றவர் கைகளிலே அகப்பட்டுக் கிடக்கிறேன்...
உண்மையான சுதந்திரம்...
என்னவென்று அறிய நினைக்கிறேன்...
காயிறால் நீ கட்டப்பட்டது போல்...
நானும் கட்டுப்பட்டுக் கிடக்கிறேன்...
கயிறால் அல்ல...
கண்டிப்பினால்...
மடை திறந்த வெள்ளம் போல்...
இருவரும் உடைத்துக் கொண்டு...
சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நாள்...
வெகுதொலைவில் இல்லை...
பட்டமோ...
கனவோ...
பிடித்து வைப்பதற்கு அல்ல...
பறக்க விடுவதற்கே...
மேலே மேலே பறந்து...
சிகரம் தாண்டி...
வானம் தொடுவோம்...!
Poet - riyashok
- Get link
- X
- Other Apps
Popular posts from this blog
Bharathiyar drawing for kids
#Salute our freedom fighter Subramaniya Bharathiyar. #He is pride of our nation. He wrote poems for freedom fight. #His part of national freedom work is unforgettable. #We are happy to share our hero. #He done more work for women freedom and their education... # RiyAshoK shades அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே... உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்... அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே... -மகாகவி பாரதியார். நன்றி மீண்டும் வருக...
Tamil kavithai collection for all relationship
தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள். அம்மா அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok அப்...
News paper, hope, god Tamil kavithai
தமிழ் கவிதைகள் இந்த கவிதையில் நட்பு, காதல், விரும்பிய ஒருவரின் பிரிவு ஆகிய தலைப்புகளில் கவிதைகள் எழுதியுள்ளேன். படித்து தங்களுக்கு நெருங்கிய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். செய்தித்தாள் வீட்டு விஷயங்கள் கூட அறிந்து கொள்ள அனுமதிக்கப்படாத எனக்கு... உலக விஷயங்களை பரிச்சயம் ஆக்கினாய்... இருண்டு கிடந்த அறிவின் அறைகளில் அறிவென்னும் ஒளி ஏற்றினாய்... காண்பவர் கண்களுக்குக் காகிதமாய்த் தெரிந்தாலும்... உன்னைக் களைபவர் கண்களுக்குக் கோபுரம் ஆகிறாய்... அறிவிலியும் ஞானியானான் உன்னால்... விளக்கின் ஒளியில் பயிலும் மாணவர்களுக்கு... என்றும் நீ அணையா விளக்கே...! Poet - riyashok நம்பிக்கை கோபுரங்கள் சாய்ந்தாலும் சாய்வதில்லை... வானம் வீழ்ந்த போதும் வீழ்வதில்லை... கடல் நீர் வற்றினாலும் வற்றுவதில்லை... நெருப்பாலும் அழிவதில்லை... நீராலும் அணைவதில்லை... தோற்றாலும் துவண்டு விடுவதில்லை... நம்பிக்கை...! Poet - riyashok கடவுள் கோவில்களும்... கோபுரங்களும்... அலங்காரங்களும்... ஆடைகளும்... ஆபரணங்களும்... நம்பிக்கைகளும்... மூடநம்பிக்கைகளும்... வேண்டுதல்களும்... காணிக்கைகளும்... படைத்தவன...
Comments
Post a Comment
Thank you for visit. Share your favorite to your friends and family.