Tamil kavithai collection for all relationship

தமிழ் கவிதைகள் அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இங்கு நீங்கள் விரும்பும் பல தலைப்புகளில் தமிழ் கவிதைகளை படிக்கலாம். உங்களுக்கு பிடித்தமான கவிதைகளை நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மகிழுங்கள்.  அம்மா  அழும் போது கைக்குட்டையானாய்... சிரிக்கும் போது சிரிப்பின் ஓசையானாய்... தவழும் போது தரையானாய்... நடைப்பழகும் போது நடைவண்டியானாய்... உறக்கம் வரும் போது தாலாட்டானாய்... பள்ளி செல்லும்போது குருவானாய்... கல்லூரி செல்லும்போது தோழியானாய்... மழை வேளையில் குடையானாய்... கோடையில் நிழலானாய்... இருளில் ஒளியானாய்... இன்பத்தின் ஆதியானாய்... துன்பத்தின் அந்தமானாய்... குழப்பத்திற்கு முடிவானாய்... முயற்சியில் துணையானாய்... இலக்கை அடைய ஏணியானாய்... வெற்றியில் பரிசானாய்... தோல்வியின் போது நான் சாயும் தோளானாய்... தடுமாறும் போது ஊன்றுகோலானாய்... என் அனைத்து அசைவுகளும் நீயானாய்... என்னுள் நானானாய்... என்னைப் பெற்றுத் தாயானாய்... என்ன வரம் கொண்டேனோ... இன்று நீ சேயாய் மாறி விட்டாய்... நான் உன் தாயாகவோ...? Poet- riyashok  அப்...

National Inventor day special poem

தமிழ் கவிதைகள்

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இன்று தேசிய கண்டுபிடிப்பாளர்கள்  தினம் . ஒவ்வொரு கண்டுபிடிப்பும் ஏதோ ஒரு நல்ல எண்ணத்தில் உருவாக்கப்பட்டவை அவற்றை சரியான வழியில் பயன்படுத்தி பயன்பெறுங்கள். இன்று தங்களுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியை கண்டுபிடிப்புகளுக்காக செலவு செய்த கண்டுபிடிப்பாளர்களை போற்றும் வகையில் எளிமையான ஒரு கவிதையை பதிவிடுகிறேன் பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ளலாம் நன்றி.

தேசிய கண்டுபிடிப்பாளர்கள் தினம் ( February 11- National Inventor day special poem)

பறக்கும் பறவை...

பறப்பதைக் கண்டு வியந்து...

தானும் பறக்கவே...

விமானம் படைத்தான்...

நீந்தும் மீன்...

மூழ்காமல் மிதக்கும்...

வித்தையைக் கண்டு...

தானும் மிதக்க எண்ணியே...

படகைப் படைத்தான்...

எங்கேயோ தொலைவில்...

திக்குத் தெரியாமல்...

தவித்துக் கிடக்கும் உறவுகளை...

இணைக்கும் நோக்கில்...

அலைபேசி படைத்தான்...

அம்மியில் அரைத்து...

ருசியாய் உண்டாலும்...

வலிக்கும் கைகளை...

மனதில் கொண்டு...

மிக்சியைப் படைத்தான்...

நடந்து நடந்து...

கால்கள் ஆரோக்கியமாய் இருந்த போதும்...

அதன் வேதனையை...

மனதில் கொண்டு...

வாகனங்கள் படைத்தான்...

நேரம் காட்ட...

வானில் இயற்கையாய்...

சூரியன் இருந்தாலும்...

துல்லியமாய் கணிக்க...

கடிகாரம் படைத்தான்...

முட்கள் குத்திக் குத்தி...

காயம்பட்ட பாதங்கள்...

காயங்கள் ஆறவே...

காலணிகள் படைத்தான்...

சிறு நோயால்...

ஆட்கொள்ளப்பட்டு...

உயிர் கூட போகும் காலம் மாறவே...

மருந்துகள் படைத்தான்...

இன்பமோ...

துன்பமோ...

ஏக்கமோ...

ஏமாற்றமோ...

மனம் அலைபாயும்...

அனைத்து சூழ்நிலையிலும்...

அதை சாந்தபடுத்தவே...

கற்பனை ஊரும்...

கவிகள் படைத்தான்...

இரவில்...

இருட்டில்...

முட்டி மோதும் நிலை மாற...

விளக்குகள் படைத்தான்...

வெயிலிலும்...

மழையிலும்...

குளிரிலும்...

கலங்காமல் வாழ...

வீடுகள் படைத்தான்...

வான் முதல்...

நிலம் வரை...

ஒவ்வொரு அணுவையும்...

துளைத்து...

ஒவ்வொரு கருவியும்...

சாதனமும்...

நித்தம் படைக்கும்...

ஒவ்வொரு படைப்பாளியும்...

ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய சாதனையார்களே...

அங்கீகாரம் மறுக்கப்பட்டு...

அளிக்கப்படாமல்...

உலகின் ஒவ்வொரு மூலையிலும்...

புதைந்து கிடக்கும்...

அனைத்து படைப்பாளிகளையும்...

போற்றும் வகையில்...

இந்நாளை கொண்டாடி வாழ்த்துவோம்...!

Poet - riyashok 

Comments

Popular posts from this blog

Bharathiyar drawing for kids

Tamil kavithai collection for all relationship

News paper, hope, god Tamil kavithai