National home appliance assurance day awareness poem
- Get link
- X
- Other Apps
தமிழ் கவிதைகள்
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே மீண்டும் எங்களுடைய வலைத்தளத்தில் தமிழ் கவிதைகளை பதிவிட தொடங்கியுள்ளோம். இன்று தேசிய வீட்டு உபயோக பொருட்கள் உத்திரவாத நாள் இந்த நன்னாளில் உத்திரவாதம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த எளிமையான ஒரு கவிதையை பதிவிடுகிறேன் பள்ளி மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ளலாம் நன்றி.
தேசிய வீட்டு உபயோக பொருட்கள் உத்திரவாத நாள் விழிப்புணர்வு கவிதை ( February 10 - National home appliances assurance day awareness poem)
இரவில் கண்ட கனவுகள்...
பகலில்...
நிலைப்பதில்லை...
வானில் வரும் நிலவு...
காலையில்...
தெரிவதில்லை...
பகலில் உதிக்கும் சூரியன்...
இரவில்...
இருப்பதில்லை...
பொய்யான உறவுகள்...
இறுதிவரை...
வருவதில்லை...
சுவற்றில் எழுதிய எழுத்துகள்...
அழியாமல்...
பதிவதில்லை...
கடற்கரையில் பதிந்த சுவடுகள்...
அலைகள் தாண்டி...
பிழைப்பதில்லை...
வெயிலில் வைத்த நீர்...
ஒருபோதும்...
உறைவதில்லை...
கவலை கொண்ட கண்கள்...
காந்தமாய்...
ஈர்ப்பதில்லை...
உப்பு கூடிப்போன உணவு...
நாவில்...
ருசிப்பதில்லை...
கோபம் கொண்ட உதடுகள்...
நற்சொல்...
உரைப்பதில்லை...
காரம் மிகுந்த ஆகாரம்...
அமுதமாய்...
சுவைப்பதில்லை...
அலைகள் உள்ள கடல்கள்...
எப்போதும்...
ஓய்வதில்லை...
அதுபோல்...
வீட்டில் உள்ள பொருட்கள்...
பழுதாகாமல்...
உழைப்பதில்லை...
பழுதாகாமல் மனதைக் காக்க...
இதமான பாடல்கள் உண்டு...
பழுதாகாமல் பொருட்களைக் காக்க...
உத்திரவாதம் மட்டுமே உள்ளது...
நம் உழைப்பைக் குறைக்கும் பொருட்களைப் பாதுகாக்க....
உரிமையாளரின் உத்திரவாதம் பெறுவோம்...
பொருட்கள் மீது...
அக்கறை கொள்...
ஆசை கொள்ளாதே...
உத்திரவாதம் பெற...
நினைவுபடுத்தும் இந்நாளை...
போற்றி மகிழ்வோம்...!
Poet - riyashok
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
Thank you for visit. Share your favorite to your friends and family.